Posts

Showing posts from 2020

கமாலுத்தீன் வதமாமுன்நிஃமா எனும் நூல் ஈசா நபி காஷ்மீரில் மரணித்ததாக சொல்கிறதா?

Image
கமாலுத்தீன் வ தமாமுன்நிஃமா எனும் நூலும் ஈசா நபியின் பெயரில் காதியானி பித்தலாட்டாம் ------------------------------------------------ காதியானிகள் எப்போதும் தமக்கு தேவையான வாதங்களை குர்ஆன்,ஹதீஸ் மற்றும் மற்றவர்களின் புத்தகங்களிலிருந்தும் கட்டிங் ஒட்டிங் செய்து வாதிடுவார்கள். இந்த வகையில் ஈசா நபி காஷ்மீரில் மரணித்துவிட்டதாக கமாலுத்தீன்-வதமாமுன்நிஃமா எனும் நூல் கூறுவதாக அடித்துவிடுகிறார்கள். இது பச்சை பொய் மற்றும் பாரிய மோசடி ஆகும்.  இதை பார்க்க முன் இப்புத்தகம் பற்றி பார்ப்போம்: இப்புத்தகம் சீஆக்களின் இஸ்னாஅசரிய்யா என்ற பிரிவினரால் எழுதப்பட்ட புத்தகம் ஆகும்.  அதில் முகம்மது இப்னு ஹசன் அல்அஸ்கரி (பிறப்பு ஹி.255-258) அவர்கள் தான் வாக்களிக்கப்பட்ட இமாம் மஹ்தி மற்றும் 12ம் இமாம் என கூறுகிறது. அவர் சிறு வயதிலிருந்து மக்களிடமிருந்து ஒளிந்து வாழ்வதாகவும் , மறுமை நெருங்கும்போது ஈசா நபியின் வருகைக்கு முன் மீண்டும் மக்களிடம் தோன்றுவார் என்றும் இந்நூல் கூறுகிறது.   இனி நம் விசயத்திற்கு வருவோம்.  இப்புத்தகம் ஈசா நபி எனும் யூசாஆசாஃப்/யூசாசிஃப் காஷ்மீரில் மரணித்துவிட்டதாக கூறுகிறது என காதியானி முல்லாக்க...

மூசாவும் ஈசாவும் உயிருடன் இருந்தால்- காதியானி பித்தலாட்டம்.

மூசாவும் ஈசாவும் உயிருடனிருந்தால் என்னை பின்பற்ற வேண்டும்- காதியானி பித்தலாட்டகாட்டுகிறார்கள் ------------------------------------ மிர்சா குலாம் அஹ்மது காதியானி என்பவர் தன்னை ஈசா நபி என வாதிட்டார். அவரை ஒருகூட்டம் உண்மை என நம்பி நம்முடன் வாதிப்பவர்களாக இருக்கிறார்கள். இவர்கள் எப்போதும் ஈசா நபியை மரணித்தவராக காட்டுவதற்கே முயற்சிப்பார்கள். அப்படி செய்தால் தானே அவர்களின் மிர்சா காதியானியை ஈசா நபி என நிருவ முடியும்? அதற்காக சம்பந்தமே இல்லாத அல்லது ஆதாரமே இல்லாத தகவல்களை பகிர்ந்து தமக்கு ஆதாரம் கிடைத்துவிட்டதாக வாதாடுவார்கள். அந்த வகையில் இவர்கள் காட்டும் ஒரு செய்தியை பார்ப்போம்: ﻟﻮ ﻛﺎﻥ ﻣﻮﺳﻰ ﻭﻋﻴﺴﻰ ﺣﻴﻴﻦ ﻟﻤﺎ ﻭﺳﻌﻬﻤﺎ ﺇﻻ ﺍﺗﺒﺎﻋﻲ- முசாவும் ஈசாவும் இரு உயிருடன் உள்ளவர்களாக இருந்தால், என்னை பின்பற்றுவதை தவிர அவர்களிருவருக்கும் (வேறு எதுவும்) முடியாது./அனுமதியில்லை. (தஃப்சீர் இப்னு கசீர் -குர்ஆன் 3:81க்கான விளக்கத்தில் வரும் செய்தி) இதே செய்தியை ச-அஃரானி, இப்னுல் கையும் உட்பட பலர் தம் நூல்களில் பதிந்துள்ளார்கள். ஆனாலும் ஸஹீஹான ஹதீஸ்களில் மூசா நபியை குறித்து மட்டுமே இவ்வாறு கூறப்பட்டுள்ளது. ஈசா நபியை...

நபிகளாரின் மகன் இப்ராஹீம் பற்றிய அறிவிப்பில் காதியானி பித்தலாட்டம்.

Image
நபிகளாரின் மகன் இப்ராஹீம் பற்றி அறிவிப்பும் காதியானிகளின் பித்தலாட்டமும் ------------------------------------------------ காதியானிகள் என்போர் மிர்சா குலாம் அஹ்மது காதியானி என்பவரை  மஹ்தியாகவும் ஈசா நபியின் இரண்டாம் வருகையாகவும், மர்யமாகவும், கிருஷ்ணராகவும், மைத்ரேய புத்தராகவும் , நபியாகவும் ஏற்றுக்கொண்டவர்கள் ஆவர். இவர்கள் தம்மை அஹ்மதிகள் என சொல்லிக்கொள்வார்கள். முகம்மது (ஸல) அவர்களின் பின் நபிமாரின் வருகை இருக்காது.. நுபுவ்வதும் ரிசாலத்தும் முற்றுப்பெற்றுவிட்டது என்பது ஒட்டுமொத்த முஸ்லிம்களின் நம்பிக்கை.. இதை தான் குர்ஆன் 33:40 - "முகம்மது உங்ளில் (வளர்ந்த) ஆண்கள் எவருக்கும் தந்தையாக இல்லை. மாறாக அல்லாஹ்வின் தூதராகவும் காதமுன்னபிய்யீனாகவும் இருக்கிறார்" என்று சொல்கிறது. அதாவது காதமுன்னபிய்யீன் என்றால் எவருக்கு பின் நபிமாரின் வருகை இல்லையோ, எவருடைய வருகையின் மூலம் நபிமாரின் வருகை முற்றுப்பெற்று முத்திரை இடப்பட்டதோ அப்படிப்பட்டவரை குறிக்கிறது. இதை நபிகளார் தெளிவாக கூறியுமுள்ளார்கள். நான் காதமுன்னபிய்யீனாக இருக்கிறேன். எனக்கு பின் நபியே இல்லை. ‏ ‏ (وَأَنَا خَاتَمُ النَّبِيِّي...

எக் கலாத்தி கா இஸாலா- பொய்யாகும் காதியானிய கற்பனை

Image
எக் கலாதி கா இஸாலா -"ஒரு தவறான எண்ணம் அகற்றப்படுகிறது" மூலம் பொய்யாக்கப்படும் காதியானிசம் ------------------------------------------------ "எக் கலா(த்)தி கா இஸலா" எனப்படும் உருது நூலின் தமிழாக்கமே "ஒரு தவறான எண்ணம் அகற்றப்படுகிறது" என நூலாகும். இதை உருது மொழியில் மிர்சா காதியானி கி.பி. 1901ல் எழுதியது ஆகும். இது காதியானி கொள்கைக்கே வேட்டுவைக்கும் ஒன்று தான் இந்நூல். மிர்சா காதியானி என்பவர் தன்னை இமாம் மஹ்தி என்றும், மர்யம் என்றும் ஈசா நபி என்றும் நபி என்றும் வாதிட்டவர். இவரை சுருக்கமாக ஒரே வார்த்தையில் சொல்வதென்றால் "ஒரு தஜ்ஜால்" என சொல்லிவிடலாம். இவர் எப்படி நபியாக மாறினார் என்பதை விளக்கும் நூலே இது. அதாவது  -"முகம்மது நபி நபிமார்களின் முத்திரையாக இருக்கிறார். அவருக்கு பின் நபி இல்லை! ஒருவர் முகம்மது நபிக்கு பின் தன்னை நபி என யாருக்கும் சொல்லமுடியாதாம். ஆனால் ரசூலில் ஃபனா ஆகினால் மட்டும் விதிவிலக்காம்." (பக்கம் 8) "இப்படி முகம்மது நபியில் ஃபனாவாகி அதனால் நபித்துவம் மெற்றால், அவர் முகம்மது நபியின் நுபுவ்வத்தை தான் பெறுகிறார். (அ...

இமாம் மஹ்தியும் ஈசா நபியும் ஒரே நபரா? -காதியானி பித்தலாட்டம்

இமாம் மஹ்தியும் வரக்கூடிய ஈசா நபியும் ஒருவரா? - காதியானி பித்தலாட்டத்திற்கு பதில்: ------------------------------------------------ நபிகளார் தம் குடும்பத்திலிருந்து  ஒரு ஆட்சியாளர் வருவார் , அவர் அரபுகளை ஆட்சி செய்வார், பூமியை நீதத்தால் நிரப்புவார் என்றெல்லாம் கூறியுள்ளார்கள். அவரை அல்மஹ்தி அல்லது இமாம் மஹ்தி என அழைக்கிறோம். அதேபோல ஈசா நபி மறுமை நெருங்கும்போது, தஜ்ஜால் புறப்பட்டு 40 நாட்களின்பின் இரு மலக்குமார்களின் இறக்கைகளில் கைவைத்தவராக இறங்குவார். தஜ்ஜாலை கொல்வார். அவர் ஹஜ் உம்ரா செய்வார். அவர் இந்த உம்மத்தில் தொழுகையில் இமாமத் செய்யமாட்டார். காரணம் அவர் இந்த உம்மத்தில் பிறந்தவர் அல்ல என்பன ஹதீஸ்களில் காண முடிகிறது. ஆனால் பிற்காலத்தில் கிறிஸ்தவர்களில் பலர் தம்மை இயேசு என வாதிட்டது போலவே, முஸ்லிம் பெயர்தாங்கிகளும் தம்மை ஈசா நபி என வாதிட்டு காஃபிர்களாகி தம் மக்களையும் காஃபிர்களாக மாற்றினர். அந்த வகையில் பிரிட்டிஷ் இந்தியாவில் பஞ்சாபிலுள்ள காதியான் என்ற ஊரில் ஒரு பொய்யர் தோன்றி தம்மை ஈசா, மஹ்தி, கல்கி,புத்தர் என அடித்துவிட்டார்.. ஈசா நபி இந்த உம்மத்தவர் அல்ல என்றும், மஹ்தி இந்த உம்...

நபிகளாருக்கு முன்னுள்ள தூதர்கள் அனைவரும் மரணித்துவிட்டனரா?? (3:144)

நபிகளாருக்கு முன்னுள்ள எல்லா ரசூல்களும் மரணித்துவிட்டார்களா? (3:144)?? - காதியானி பித்தலாட்டம் ------------------------------------------------ وَمَا مُحَمَّدٌ اِلَّا رَسُوْلٌ   قَدْ خَلَتْ مِنْ قَبْلِهِ الرُّسُلُ‌ اَفَا۟ٮِٕنْ مَّاتَ اَوْ قُتِلَ انْقَلَبْتُمْ عَلٰٓى اَعْقَابِكُمْ‌ وَمَنْ يَّنْقَلِبْ عَلٰى عَقِبَيْهِ فَلَنْ يَّضُرَّ اللّٰهَ شَيْئًا‌  وَسَيَجْزِى اللّٰهُ الشّٰكِرِيْنَ‏  முஹம்மது(ஸல்) (இறைவனின்) தூதரே அன்றி(வேறு) அல்லர்; அவருக்கு முன்னரும் (அல்லாஹ்வின்) தூதர்கள் பலர் (காலம்) சென்றுவிட்டார்கள்; அவர் இறந்து விட்டால் அல்லது கொல்லப்பட்டால்; நீங்கள் உங்கள் குதிகால்களின் மேல் (புறங்காட்டித்) திரும்பி விடுவீர்களா? அப்படி எவரேனும் தம் குதிகால்கள்மேல் (புறங்காட்டி) திரும்பி விடுவாரானால் அவர் அல்லாஹ்வுக்கு எவ்விதத் தீங்கும் செய்துவிட முடியாது; அன்றியும், அல்லாஹ் நன்றியுடையோருக்கு அதிசீக்கிரத்தில் நற்கூலியை வழங்குவான். (அல்குர்ஆன் : 3:144) இவ்வசனத்தின்படி, "அர்ருசுலு" என்பதற்கு பல தூதர்கள் ஜான் ட்ரஸ்ட் இப்பட பொதுவாக எல்லா தமிழாக்கங்களிலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ள...

ஈசா நபியும் காஷ்மீரில் அடக்கப்பட்ட யூசா ஆசாஃபும்

யூசா ஆசாஃபும் ஈசா நபியும் -(கஷ்மீர் கல்லறை) -காதியானி பித்தலாட்டம்!! ------------------------------------------------ மிர்சா குலாம் காதியானி என்பவர் தன்னை வாக்களிக்கப்பட்ட ஈசா என வாதிட்டார். அத்துடன்  அன்னை மர்யமிடம் பிறந்த ஈசா நபி மரணித்துவிட்டதாகவும் கூறினார். இவரை ஒரு கூட்டம் ஏற்றுக்கொண்டது. மர்யமின் மகன் மரணித்துவிட்டிருந்தால், அவருக்கு கல்லறை இருக்கும் அல்லவா?? அதை சீடர்கள் கேட்பதால் எப்படியாவது சமாளிக்கணும் என அவர் கல்லறைவதேடிக்கொண்டிருந்தார். ஆரம்பத்தில் ஈசாநபியின் கல்லறை ஜெருசலேமில் இருக்கிறது என சொன்னார். பின்பு சிரியாவில் இருந்த ஒரு காதியானி மௌலவி முகம்மது சயீத் அல்திரப்லிசி என்பவர் அவர் இருக்கும் ஏரியாவில் தான் ஈசா நபியின் கல்லறை இருப்பதாக உறுதிப்படுத்தினார் என கூறி சிரியாவில் தான் கல்லறை இருக்குனு சொன்னார். (இத்மாமுல் ஹுஜ்ஜா 18-19, ரூஹானி கஸாயின் பா-8 பக்-296-297) இதன்பின் கடைசி காலத்தில், மௌலவி நூர்தீன் காஷ்மீரில் இருந்தபோது, அங்கே ஒரு கல்லறையை காண்கிறார். அதை பிரபுவான நபி சாஹிபுடைய கல்லறை என மக்கள் சொன்னார்களாம். அவர் தான் யூஸாஸாஃப் என்றும் ...

அஹ்மது நபியும் காதியானிகளின் பித்தலாட்டமும்!!

அஹ்மது என்ற இறைதூதர் யார்? - காதியானிகளின் குருட்டுத்தன்மை ------------------------------------------------ கண்ணியமிக்க இறைவன் தன் வேதத்தில், ஈசா நபி  அஹ்மது என்ற தூதரை பற்றி முன்னறிவித்ததை  இவ்வாறு கூறுகிறான்: وَاِذْ قَالَ عِيْسَى ابْنُ مَرْيَمَ يٰبَنِىْۤ اِسْرَآءِيْلَ اِنِّىْ رَسُوْلُ اللّٰهِ اِلَيْكُمْ مُّصَدِّقًا لِّمَا بَيْنَ يَدَىَّ مِنَ التَّوْرٰٮةِ وَمُبَشِّرًا بِرَسُوْلٍ يَّاْتِىْ مِنْ بَعْدِى اسْمُهٗۤ اَحْمَدُ‌ فَلَمَّا جَآءَهُمْ بِالْبَيِّنٰتِ قَالُوْا هٰذَا سِحْرٌ مُّبِيْنٌ‏  மேலும், மர்யமின் புதல்வர் ஈஸா, “இஸ்ராயீலின் மக்களே! எனக்கு முன்னுள்ள தவ்ராத்தை உண்மைப்படுத்தியவனாகவும், எனக்குப் பின்னர் அஹ்மது எனும் பெயருள்ள ஒரு தூதர் வருவார் என நன்மாராயம் கூறுபவனாகவும் நிச்சயமாக உங்கள்பால் (அனுப்பப்பட்ட) அல்லாஹ்வின் தூதராக நான் இருக்கிறேன்” என்று கூறியதை (நபியே! நீர் நினைவு கூர்வீராக) பின்னர், (அவர் கூறியவாறு) தெளிவான அத்தாட்சிகளுடன் அவர்களிடம் (அத்தூதராகிய) அவர் வந்தபொழுது, இது தெளிவான சூனியம்” என்று அவர்கள் கூறினர். (அல்குர்ஆன் : 61:6) இங்கே ஈசா ...

இரு வெவ்வேறு ஈசா நபிகளா? - காதியானிகளுக்கு மறுப்பு

இரண்டு ஈசா நபியா? காதியானி பித்தலாட்டம் ------------------------------------------------ ஈசா நபியை பற்றி நபிகளார் பனு இஸ்ராயீலிய ஈசா , வரக்கூடிய ஈசா என நபிகளார் ஒருபோதும் பிரித்து சொன்னதில்லை. ஆனாலும் சில அறிவிப்புகளை போதிய ஞானமின்றி படித்துவிட்டு, பனுஇஸ்ராயீலிய ஈசா சிவப்புநிறத்தவராகவும் சுருள்முடியை உடையவர் என்றும், வரக்கூடிய ஈசா மாநிற படிந்த வாரிய முடி உடையர் என்றும் கூறுவதாக இவர்கள் அடித்துவிட்டு, பனு இஸ்ராயீலிய ஈசா வேறு, வரக்கூடிய ஈசா வேறு என்றும் பனு இஸ்ராயீலிய ஈசா மரணித்துவிட்டார் என்றும்  காதியானிகள் அடித்துவிடுகிறார்கள் அதில் அவர்கள் கூறும் இரு அறிவிப்புகளையும் பார்ப்போம்: 1.ஈசா நபி சுருள் முடி ( جَعْدٌ), சிவந்த நிறம் ‏ رَأَيْتُ عِيسَى وَمُوسَى وَإِبْرَاهِيمَ، فَأَمَّا عِيسَى فَأَحْمَرُ جَعْدٌ عَرِيضُ الصَّدْرِ ، وَأَمَّا مُوسَى فَآدَمُ جَسِيمٌ سَبْطٌ كَأَنَّهُ مِنْ رِجَالِ الزُّطِّ ‏" ‏‏‏ Narrated Ibn `Abbas: Sahih al-Bukhari 3438 In-book : Book 60, Hadith 109 USC-MSA web (English) : Vol. 4, Book 55, Hadith 648  (deprecated) Sahih...

மிர்சா காதியானியும் முகம்மதி பேகமும்!! பொய்யரென நிரூபனமான காதியானி

முகம்மதி பேகமும் மிர்சா காதியானியின் பித்தலாட்டமும் ------------------------------------------------ .. மிர்சா குலாம் மிகம்மதி பூகத்தை மணப்பது பற்றி இவ்வாறு சொன்னார்: முஹம்மதீ பேகத்தை நாம் உமக்கு திருமணம் செய்து வைத்தோம் என்று அல்லாஹ் எனக்கு வஹீ அறிவித்தான். இது ஒரு முன்னறிவிப்பு அல்ல. இதில் ஆறு முன்னறிவிப்புகள் உள்ளன. முதலாவது : அவளைத் திருமணம் செய்யும் வரை நான் உயிருடன் இருப்பேன். இரண்டாவது; அவளைத் திருமணம் செய்யும் வரை அந்தப் பெண்ணின் தந்தை உயிருடன் இருப்பார். மூன்றாவது எனக்குத் திருமணம் செய்து தந்த பின் அவளுடைய தந்தை மூன்று வருடத்துக்குள் இறப்பார். நான்காவது முஹம்மதீ பேகத்தின் கணவர் சுல்தான் முஹம்மத் இரண்டரை வருடத்தில் மரணிப்பார். ஐந்தாவது அப்போது நான் முஹம்மதீ பேகத்தைத் திருமணம் செய்வேன். ஆறாவது அவளை மணப்பேன் . அது வரை அவள் உயிருடன் இருப்பாள் இந்த ஆறு அறிவிப்புக்கள் நிறைவேறா விட்டால் அதுவே நான் பொய்யன் என்பதற்கான ஆதாரம் என்று மிர்ஸா குலாம் சொன்னார். ஆயினே கமாலாத் என்ற நூலில் 325 ஆம் பக்கத்தில் இதை அவர் எழுதினார்.. இது நிறைவேறவில்லை என எல்லோருக்கும் தெரியும்.. ...