நபிகளாருக்கு முன்னுள்ள தூதர்கள் அனைவரும் மரணித்துவிட்டனரா?? (3:144)

நபிகளாருக்கு முன்னுள்ள எல்லா ரசூல்களும் மரணித்துவிட்டார்களா? (3:144)?? - காதியானி பித்தலாட்டம்

------------------------------------------------

وَمَا مُحَمَّدٌ اِلَّا رَسُوْلٌ   قَدْ خَلَتْ مِنْ قَبْلِهِ الرُّسُلُ‌ اَفَا۟ٮِٕنْ مَّاتَ اَوْ قُتِلَ انْقَلَبْتُمْ عَلٰٓى اَعْقَابِكُمْ‌ وَمَنْ يَّنْقَلِبْ عَلٰى عَقِبَيْهِ فَلَنْ يَّضُرَّ اللّٰهَ شَيْئًا‌  وَسَيَجْزِى اللّٰهُ الشّٰكِرِيْنَ‏ 
முஹம்மது(ஸல்) (இறைவனின்) தூதரே அன்றி(வேறு) அல்லர்; அவருக்கு முன்னரும் (அல்லாஹ்வின்) தூதர்கள் பலர் (காலம்) சென்றுவிட்டார்கள்; அவர் இறந்து விட்டால் அல்லது கொல்லப்பட்டால்; நீங்கள் உங்கள் குதிகால்களின் மேல் (புறங்காட்டித்) திரும்பி விடுவீர்களா? அப்படி எவரேனும் தம் குதிகால்கள்மேல் (புறங்காட்டி) திரும்பி விடுவாரானால் அவர் அல்லாஹ்வுக்கு எவ்விதத் தீங்கும் செய்துவிட முடியாது; அன்றியும், அல்லாஹ் நன்றியுடையோருக்கு அதிசீக்கிரத்தில் நற்கூலியை வழங்குவான்.
(அல்குர்ஆன் : 3:144)

இவ்வசனத்தின்படி, "அர்ருசுலு" என்பதற்கு பல தூதர்கள் ஜான் ட்ரஸ்ட் இப்பட பொதுவாக எல்லா தமிழாக்கங்களிலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது!

ஆனால் காதியானீகள் "எல்லா தூதர்களும் மரணித்துவிட்டனர்" என தப்பாக மொழிபெயர்த்துள்ளார்கள்!

இதற்கு காரணம், அரபு இலக்கணம் சரியாக தெரியாமை ஆகும்!

இவர்களிடம் நாம் சொல்லிக்கொள்வது:

உங்களுக்கு எந்த விசயத்தில் அறிவு இல்லையோ, அதில் வாய் திறக்க கூடாது.

3:144 இல்,

#கத் #கலத் மின் #கப்லிஹி #அர்ருசூலு என உள்ளது.

இங்கே "அலிஃப் லாம்" அதாவது "அல்" என பாவிக்கப்பட்டுள்ளது.

"அர் ருஸுலு" என பாவிக்கப்பட்டுள்ளது.

இப்படி "அல்" வருவதை மூன்றாக பிரிக்கலாம்!

1.அல் அஹ்திய்யா-
*இது முன்னர் குறிப்பிட்ட ஒன்றை திரும்ப குறிப்பிடும்போது (உதாரணமாக, ரஐ(த்)து ரஜுலன்.... அர்ரஜுலு ஃதஹப )
இங்கே ரஜுலுக்கு வருவது போல

*நம் முன் இருக்கும் ஒன்றுக்கு பாவிப்போம்:
(உதாரணமாக "ஹாதா அல்கிதாபு ஜமீலுன்")

*பேசுபவருக்கும் கேட்பவருக்கும் அறிமுகமானவற்றுக்கு பாவிப்போம்:

2.அல்-ஜின்ஸிய்யா

இது இருவகை

அ).இஸ்திஃக்ராகுல் ஜின்ஸ் (முழு இனத்தையும் உள்ளடக்கும்)

உதாரணமாக

"அல்இன்சானு யமூது" - மனிதன் இறக்கிறான்.

இங்கே மனிதன் என்பதில் முழு மனித இனமும் அடங்கும்!

குறிப்பாக இது ஒருமையில் இருக்கிறதை கவனிக்கவும்!

ஆ). பயானுல் ஹகீகா- இது பொதுவாக ஒரு இனத்தின் பெரும்பான்மையை அல்லது அவ்இனத்தை பொதுவாக சொல்லும்..

 ஆனால் ஒட்டுமொத்த இனத்தையும் உள்ளடக்க வேண்டியதில்லை!! அதாவது விதிவிலக்குகள் காணப்படலாம்!

உதாரணமாக:

"அர்-ரிஜாலு அக்வா மின் அந்நிஸா" -
 ஆண்கள் பெண்களைவிட பலசாலிகள்.

இதில் எல்லா ஆண்களும் எல்லா பெண்களை விட பலசாலிகள் என அர்த்தம் வராது..

  இதற்கு விதிவிலக்கு உள்ளது என நம்மால் உணர முடிகிறது!

 ஏனெனில் சில பெண்கள் ஆண்களிலுள்ள பலரைவிட பலமானவர்களாக உள்ளார்கள்!

இது பொதுவான யதார்த்தமான உண்மையை குறிப்பதாகும்!!

இங்கே "அல்" என்பது பன்மையான வார்த்தைகளுக்கு முன்னால் உள்ளது!

3.ஸாயிதா- மேலதிகமாக வருபவை

உதாரணமாக "அல்ஹிந்த்" "அல்யபான்" போன்று சில நாடுகளின் பெயர்களுக்கு , மனிதர்களின் சிலருடைய பெயர்களுக்கு முன் மேலதிகமாக வரும்!!

(அல் ஹுசைன், அல்ஹசன் என்பது போல)

--------

இப்போ 3:144ஐ பார்ப்போம்:

வமா முகம்மதுன் இல்லா ரசூலுன் - முகம்மது ஒரு தூதரே அன்றி வேறு இல்லை

கத் கலத் மின் கப்லிஹி அர்ருசுலு (கப்லிஹிர்ருசுலு) - அவருக்கு முன்னர் தூதர்கள் சென்றுவிட்டனர்.

இதன்மூலம் நாடப்படுவது மரணம் என தஃப்சீர் அறிஞர்கள் கூறியுள்ளதால், அப்படியே புரிந்துகொள்வோம்:

அதன்படி "அவருக்கு முன்னர் தூதர்கள் மரணித்துவிட்டனர்" என வரும்!

இது மேலே நான் குறிப்பிட்ட "அல்" என்பதின் வகைகளில் 2ஆம் வகையான ஜின்ஸிய்யாவின் (ஆ) இல் குறிப்பிட்ட வகை ஆகும்.

அதாவது , இது ஒட்டுமொத்த தூதர்களையும் குறிக்க வேண்டிய அவசியமில்லை!. பொதுவாக கூறப்படும் விசயம் ஆகும்!!
 ஏனெனில் விதிவிளக்கு ஏனைய வசனங்களிலும் ஹதீஸ்களிலும் உள்ளது!!

அனைத்து தூதர்களையும் கட்டாயம் உள்ளடக்க வேண்டுமானால்,

ருசுல் என்பதுடன் சேர்த்து "குல்லு" என வரவேண்டும்!!

ஆகவே , அவர்களின் மொழிபெயர்ப்பு தவறானது ஆகும்!!

ஆகவே இவர்களினல இவ்வாதம் அப்பட்டமான பொய்யான வாதம் ஆகும்!!

இதேபோன்ற இன்னொரு வசனத்தை பார்ப்போம்:

இதேபோல  "வ யக்துலூன அந்நபிய்யீன பிஃகைரில் ஹக்கி"  - அவர்கள் நியாயமின்றி நபிமார்களை கொன்றதாலும்- (2:61)

இவர்கள் வாதப்படி , யூதர்கள் எல்லா நபிமார்களையும் கொன்றார்கள்.. ஆகவே மூசா நபி ஆதம் நபி நூஹ் நபி ஆகியோரையும் யூதர்கள் கொன்றார்கள் என குர்ஆன் கூறுவதாகவும்,  முஸ்லிம்கள் குர்ஆனை திரித்து சில நபிமார்களை தான் அது குறிக்கும் என சொல்வதாகவும் இவர்களின  கூறிவிடூவார்கள் போல உள்ளது!

முதலில், குர்ஆனுக்கு சுய விளக்கம் கொடுக்க முன் அரபு இலக்கணத்தை இவர்கள் படிக்க வேண்டும்!

இதன்படி, 3:144 பொதுவாக சொல்லப்படும் ஒரு வசனம்... அதில் விதிவிலக்கு  ஏனைய வசனங்களையும் ஹதீஸ்களையும் படிப்பதால் உள்ளது என புரிய முடிகிறது!

அதை தான் குர்ஆனில் , "அல்லாஹ் அவரை தன் பக்கம் உயர்த்திக்கொண்டான்" & "அவருடைய மரணத்துக்கு முன் வேதகாரர்களில் எவரும் அவரை நம்பாமல் இருக்கமாட்டார்கள்" என (4:158-159) சொல்வதும்,

ஹதீஸ்களில் தெளிவாக ஈசா நபி வருவார், அவரும் இஸ்ராயீலிய ஈசாவும் ஒருவரே என தெளிவாக உள்ளதால்,  3:144 இல் அவர் அடங்கமாட்டார் என நம் ஆதாரங்களுடன் சொல்கிறோம்!!

இவர்கள் அரபும் தெரியாமல் , ஆதாரமின்றி பதிகிறார்கள்.!!

ஆகவே, அவ்வசனம் கூறுவதற்கும், ஈசா நபியிற்கும் சம்பந்தம் இல்லை!

ஏனெனில்,

ஈசா நபி வந்து இந்த உம்மத்தை சார்ந்த ஒருவருக்கு பின்னால் தொழுவார்கள்! காரணம் அவர் இந்த உம்மத்தை சாராதவர் என்பதால் ஆகும் என ஈசாநபியே  சொல்வார். (முஸ்லிம் தமிழாக்கம் 247)

ஈசா நபி இரு வானவர்களின் இறக்கைகளில் தம் இரு கைகளை வைத்தவராக இறங்குவார். தொழுகை முடித்த பின் தஜ்ஜாலை துரத்தி சென்று கொல்லுவார்.
(முஸ்லிம் தமிழாக்கம் 5629)

ஆகவே இவர்களது கப்சாக்கள் செல்லாது!

குறிப்பு:
5:75 வசனத்தை பொருத்தமட்டில்,  "ஈசா நபியிற்கு முன் தூதர்கள் மரணித்துள்ளார்கள்" என்ற வசனத்துக்கு விதிவிளக்கு கொடுக்கும் வேறு வசனங்கள் இல்லாத படியினால், அது ஈசா நபிக்கு முன் வாழ்ந்த சகல மனித தூதர்களையும் உள்ளடக்க இயலும்!


அதேபோன்று 3:144 கூறும் நிலையில் நபிகளார் உயிரோடு இருந்தார்கள்! அதே வார்த்தை பிரயோகங்களே 5:75இலும் உள்ளதால் , அவ்வசனம் கூறும்போது ஈசா நபி முகம்மது நபியைபோல உயிரோடு இருக்கவேண்டும் எனவும் நம்மால் புரிய முடிகிறது!


ஆனால் !! குர்ஆன் 3:144 பொதுவாக சொல்லப்படுவதோடு விதிவிலக்கு கொடுக்கும் வசனமும் ஹதீஸ்களும் உள்ளன!

https://answeringqadianism.blogspot.com/2020/03/3144.html?m=1

Comments

  1. முதலில் காதியாணிகள் என்ன கூறுகிறார்கள் என்பதை தெளிவாக புரிந்துவிட்டு பேச வேண்டும். அரைகுறையாக இலக்கணம் என்ற போர்வையில் இட்டுக்கட்ட வேண்டாம்.

    எல்லா திருக்குர்ஆன் மொழி பெயர்ப்புகளிலும். பலர் சென்று போனார்கள் என்று இட்டி கட்டி கூறியதால். சில நபிமார்கள் யார் என்று கேட்கப்பட்டது. ஆனால் இவர்களால் பதிலளிக்க முடியவில்லை. ஈஸா ஒரு துதரேயன்றி வேறில்லை அவருக்கு முன்னுல்ல தூதர்கள் பலர் காலம் சென்று போனார்கள் என்றால் இங்கும் விதிவிலக்காக ஈஸா நபிக்கு முன்னால் ஙில தூதர்கள் உயிரோடு இருக்கிறார்கள் என்று கூற வேண்டடிவரும்.

    நீங்கள் இவ்வளவு தூரம் இட்டுக்கட்டிய இலக்கணக்குறிப்புகளை இந்த வசனம் அடியோடு தகர்த்துவிடுகிறது.

    ஒரு வசனத்தை வைத்துக் கொண்டு விளக்கம் கொடுத்தால் இப்படித்தான் முட்டிக் கொண்டு குனிய வேண்டி வரும்.

    முகம்மது ஒரு தூரேயன்றி வேறில்லை அவருக்கு முன்னர் வந்த தூதர்கள் காலம் சென்று போனார்கள் இந்த வசனத்திற்க்கு தெளிவான விளக்கத்தை அபூபக்கர் (ரலி) அவர்கள் நபி(ஸல்) அவர்கள் மரணிக்கும்போது கொடுத்தார்கள். புகாரியில் வருகிறது. அதன் விளக்கத்தை படித்தால் உங்களுடைய விளக்கங்கள் அனைத்தும் தவறு என்று தெரியவரும்.

    ReplyDelete
  2. யூதர்கள் நபிமார்களை கொலை செய்தார்கள் என்று காதியாணிகள் எவரும் நம்பவில்லை. அதற்க்கு மாற்றமாக அவர்கள் கொலை செய்ய முயன்றார்கள் என்றுதான் விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது.

    காதியாணிகளின் நம்பிக்கையைக்கூட அறியாமல் உங்களுடைய மன இச்சைக்கு தகுந்தவாறு விளக்கம் கொடுக்க வேண்டாம். ஈஸா நபி மரணத்தைப் பற்றி பாமரனுக்கு புரியும்படி விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

    எல்லா இஸ்லாமிய அறிஞர்களும் தற்கால அரபி அறிஞர்களும் ஏற்றுக் கொண்டுள்ளார்கள். www.muslimjamath.blogspot.com

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

இறுதி நபித்துவம் பற்றி இஸ்லாமிய இஜ்மாவும் காதமுன்நபிய்யின் பற்றி அரபு அகராதிகளும்

இமாம் அல்-மஹ்தியும் போலிகளும்

நபிகளாரின் மகன் இப்ராஹீம் பற்றிய அறிவிப்பில் காதியானி பித்தலாட்டம்.