Posts

Showing posts from March, 2020

நபிகளாருக்கு முன்னுள்ள தூதர்கள் அனைவரும் மரணித்துவிட்டனரா?? (3:144)

நபிகளாருக்கு முன்னுள்ள எல்லா ரசூல்களும் மரணித்துவிட்டார்களா? (3:144)?? - காதியானி பித்தலாட்டம் ------------------------------------------------ وَمَا مُحَمَّدٌ اِلَّا رَسُوْلٌ   قَدْ خَلَتْ مِنْ قَبْلِهِ الرُّسُلُ‌ اَفَا۟ٮِٕنْ مَّاتَ اَوْ قُتِلَ انْقَلَبْتُمْ عَلٰٓى اَعْقَابِكُمْ‌ وَمَنْ يَّنْقَلِبْ عَلٰى عَقِبَيْهِ فَلَنْ يَّضُرَّ اللّٰهَ شَيْئًا‌  وَسَيَجْزِى اللّٰهُ الشّٰكِرِيْنَ‏  முஹம்மது(ஸல்) (இறைவனின்) தூதரே அன்றி(வேறு) அல்லர்; அவருக்கு முன்னரும் (அல்லாஹ்வின்) தூதர்கள் பலர் (காலம்) சென்றுவிட்டார்கள்; அவர் இறந்து விட்டால் அல்லது கொல்லப்பட்டால்; நீங்கள் உங்கள் குதிகால்களின் மேல் (புறங்காட்டித்) திரும்பி விடுவீர்களா? அப்படி எவரேனும் தம் குதிகால்கள்மேல் (புறங்காட்டி) திரும்பி விடுவாரானால் அவர் அல்லாஹ்வுக்கு எவ்விதத் தீங்கும் செய்துவிட முடியாது; அன்றியும், அல்லாஹ் நன்றியுடையோருக்கு அதிசீக்கிரத்தில் நற்கூலியை வழங்குவான். (அல்குர்ஆன் : 3:144) இவ்வசனத்தின்படி, "அர்ருசுலு" என்பதற்கு பல தூதர்கள் ஜான் ட்ரஸ்ட் இப்பட பொதுவாக எல்லா தமிழாக்கங்களிலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ள...

ஈசா நபியும் காஷ்மீரில் அடக்கப்பட்ட யூசா ஆசாஃபும்

யூசா ஆசாஃபும் ஈசா நபியும் -(கஷ்மீர் கல்லறை) -காதியானி பித்தலாட்டம்!! ------------------------------------------------ மிர்சா குலாம் காதியானி என்பவர் தன்னை வாக்களிக்கப்பட்ட ஈசா என வாதிட்டார். அத்துடன்  அன்னை மர்யமிடம் பிறந்த ஈசா நபி மரணித்துவிட்டதாகவும் கூறினார். இவரை ஒரு கூட்டம் ஏற்றுக்கொண்டது. மர்யமின் மகன் மரணித்துவிட்டிருந்தால், அவருக்கு கல்லறை இருக்கும் அல்லவா?? அதை சீடர்கள் கேட்பதால் எப்படியாவது சமாளிக்கணும் என அவர் கல்லறைவதேடிக்கொண்டிருந்தார். ஆரம்பத்தில் ஈசாநபியின் கல்லறை ஜெருசலேமில் இருக்கிறது என சொன்னார். பின்பு சிரியாவில் இருந்த ஒரு காதியானி மௌலவி முகம்மது சயீத் அல்திரப்லிசி என்பவர் அவர் இருக்கும் ஏரியாவில் தான் ஈசா நபியின் கல்லறை இருப்பதாக உறுதிப்படுத்தினார் என கூறி சிரியாவில் தான் கல்லறை இருக்குனு சொன்னார். (இத்மாமுல் ஹுஜ்ஜா 18-19, ரூஹானி கஸாயின் பா-8 பக்-296-297) இதன்பின் கடைசி காலத்தில், மௌலவி நூர்தீன் காஷ்மீரில் இருந்தபோது, அங்கே ஒரு கல்லறையை காண்கிறார். அதை பிரபுவான நபி சாஹிபுடைய கல்லறை என மக்கள் சொன்னார்களாம். அவர் தான் யூஸாஸாஃப் என்றும் ...