Posts

Showing posts from January, 2020

மிர்சா காதியானியும் முகம்மதி பேகமும்!! பொய்யரென நிரூபனமான காதியானி

முகம்மதி பேகமும் மிர்சா காதியானியின் பித்தலாட்டமும் ------------------------------------------------ .. மிர்சா குலாம் மிகம்மதி பூகத்தை மணப்பது பற்றி இவ்வாறு சொன்னார்: முஹம்மதீ பேகத்தை நாம் உமக்கு திருமணம் செய்து வைத்தோம் என்று அல்லாஹ் எனக்கு வஹீ அறிவித்தான். இது ஒரு முன்னறிவிப்பு அல்ல. இதில் ஆறு முன்னறிவிப்புகள் உள்ளன. முதலாவது : அவளைத் திருமணம் செய்யும் வரை நான் உயிருடன் இருப்பேன். இரண்டாவது; அவளைத் திருமணம் செய்யும் வரை அந்தப் பெண்ணின் தந்தை உயிருடன் இருப்பார். மூன்றாவது எனக்குத் திருமணம் செய்து தந்த பின் அவளுடைய தந்தை மூன்று வருடத்துக்குள் இறப்பார். நான்காவது முஹம்மதீ பேகத்தின் கணவர் சுல்தான் முஹம்மத் இரண்டரை வருடத்தில் மரணிப்பார். ஐந்தாவது அப்போது நான் முஹம்மதீ பேகத்தைத் திருமணம் செய்வேன். ஆறாவது அவளை மணப்பேன் . அது வரை அவள் உயிருடன் இருப்பாள் இந்த ஆறு அறிவிப்புக்கள் நிறைவேறா விட்டால் அதுவே நான் பொய்யன் என்பதற்கான ஆதாரம் என்று மிர்ஸா குலாம் சொன்னார். ஆயினே கமாலாத் என்ற நூலில் 325 ஆம் பக்கத்தில் இதை அவர் எழுதினார்.. இது நிறைவேறவில்லை என எல்லோருக்கும் தெரியும்.. ...

இரு கிரகணங்களும் அல்மஹ்தியும் காதியானிகளுக்கு மறுப்பு

ரமழான் மாதத்தில் ஏற்படும் சூரிய சந்திர கிரகணங்கள் மஹ்தியிற்கான அடையாளமா??? -----------------------------_------ முகம்மதிப்னு அலியை தொட்டு வரும் அறிவிப்பையே காதியானிகள் ஆதாரமாக காட்டுகிறார்கள். ஜாபிர் அறிவித்ததாக அம்ர் இப்னு ஷிம்ர் அறிவிக்கிறார்கள் : முஹம்மது இப்னு அலி கூறினார்கள் மஹதிக்கு இரண்டு அடையாளங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன . வானமும் பூமியும் தோன்றிய நாளில் இருந்து இந்த அடையாளம் வேறு எந்த இறைத்தூதருக்காக வும் நிகழவில்லை . அது என்னவெனில் மஹதியின் காலத்தில் முதலாவதாக , ரமளான் மாதத்தில் முதல் இரவில் ஏற்படும் சந்திர கிரகணமும் இரண்டாவதாக , நடுவே ஏற்படும் சூரிய கிரகணமும் ஆகும் . இந்த அடையாளங்கள் வானமும் பூமியும் தோன்றிய நாள் முதல் எந்த இறைத்தூதருக்காக வும் நிகழவில்லை தாரகுத்னி பாகம் 1 பக்கம் 88 இந்த முன்னறிப்பு படி மிர்ஸா குலாம் காலத்தில் 1891நிகழ்ந்தது எனவே அவர் தான் மஹதி என வாதிடுகின்றனர் ( மேலே உள்ள இதை நபியவர்கள் சொன்னதாக ஒரு சகோதரர் நபியின் மீது பொய் கூறியுள்ளார் ) முதலில் இது ஹதீஸே அல்ல !? ஆம் இந்த செய்தி நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறியதல்ல அது ...

மிர்சா குலாமின் பொய் முன்னறிவிப்பு - அப்துல்லாஹ் கான் அதாமின் மரணம்

அப்துல்லாஹ் கான் அதாமும் மிர்சா குலாம் அஹ்மதும் ------------------------------------------------ மிர்சா குலாம் தன்னை வாக்களிக்கப்பட்ட மஸீஹ் என்ற வாதத்தை நிலைநிறுத்த சிறிதாக அறியப்பட்ட கிறிஸ்தவர்களுடன் விவாதங்களில் அடிக்கடி ஈடுபட்டார். 1893 இல் மிர்சா குலாம்  அப்துல்லாஹ் கான் அதாம் என்ற கிறிஸ்தவருடன்  எது உண்மையான மதம் என்பதை நிறூபிக்க விவாதத்தில் குதித்தார். இந்த விவாத சவாலின்போது மிர்சா சொன்னார்: "நான் புனித போருக்கு தயாராக உள்ளேன்" (ரூஹானி கஸாயின் , பாகம் 6, பக் 75) விவாதத்திற்கு முன்னர் மிர்சா குலாம் இவ்வாறு கூறியிருந்தார்: "என் உண்மைத்தன்மைக்கான அடையாளங்கள் வெளிப்படாவிட்டால், நான் இறைவனிடமிருந்து வந்தவன் அல்ல என ஒப்புக்கொண்டு, இஸ்லாமிய நம்பிக்கையையும் விட்டுவிடுவேன். அல்லது என் முழுச்சொத்தின் பாமியை கிறிஸ்தவத்தை பரப்புவதற்காக ஒப்படைத்துவிடுவேன்." (ரூஹானி கஸாயின் , பாகம் 6, பக்கம் 48-49) என்றும், "இறைவன் மீது சத்தியமாக, இறைவன் என்னிடம் " மஸீஹுக்கு எதெல்லாம் கொடுக்கப்பட்டதோ, அவை உமக்கும் கொடுக்கப்பட்டன. நீரே வாக்களிக்கப்பட்ட மஸீஹ்...

மிர்சா குலாமின் பொய் முன்னறிவிப்பு - மன்சூர் முகம்மதுவுக்கு ஆண் குழந்தை

மன்சூர் முகம்மதுவுக்கு ஆண் குழந்தை முன்னறிப்பு- மிர்சா குலாம் ----------- மிர்சா காதியானி 1902 முதல் review of religions என்ற சஞ்சிகையை மாதாமாதம் வெளியிட்டு வந்தார். அதில் , "மன்சூர் முகம்மதுவுக்கு ஆண்குழந்தை பிறப்பதாக நாம் கனவில் கண்டோம். அவரது பெயரை பற்றி நாம் கேட்டோம்.  கனவின் நிலை வஹியுடைய நிலைக்கு மாறியது.   " பஷீர் அத்-தவ்லா" என (குழந்தையின் பெயர்) கூறப்பட்டது. ஆனால் மன்சூர் முகம்மது என்பதன் மூலம் நாடப்பட்டதை நான் அறியமாட்டேன். (Review of religions , பக்கம் 122, மார்ச் 1906) நான்கு மாதங்களுக்கு பின், "மன்சூர் முகம்மது என்பவர் இவர்தான் (தன்சீடர்) என நாம் அறிவிக்கப்பட்டோம்..  அவரது தற்போதைய மனைவிக்கு ஒரு ஆண்மகன் பிறப்பான். அவன் பஷீர் அத்-தவ்லா என பெயரிடப்படுவான். அம் மகன் இப்போதைய கர்ப்பத்திலுள்ளவர் அல்லாமல் இருக்க முடியும், ஆனால் அடுத்ததில் இருப்பார்.  எது எப்படியிருப்பினும், அவன் பிறப்பான் என்பது தடுக்க பட முடியாது.. அவன் இறைவனின் அத்தாட்ணியாக இருப்பான்" (Review of religions , June 1906) "மன்சூர் முகம்மதுவுக்கும் அவரது மனைவிக்கும் பஷீ...

இரண்டு ஈசா நபிகள் இல்லை!! இஸ்ராயீலிய ஈசா நபியே வர இருப்பவர்

இரண்டு இப்னு மர்யம் உள்ளனரா? இஸ்ராயீலிய ஈசாவும் வரக்கூடிய ஈசாவும் வெவ்வேறானவர்களா?? ---------------------------------------------------------------------------------------------- காதியானிகள் எப்படியாவது ஈசா நபியை மவ்த்தாக்குவதற்கே பார்ப்பார்கள். இவர்களுடன் விவாதிக்க நேர்ந்தால் இவர்களாக விரும்பி எடுக்கும் தலைப்பு "ஈசா நபி மரணித்துவிட்டார்" என்பதாக தான் இருக்கும். இதை வைத்து காலத்தை கடத்திவிடுவார்கள் ஆனால் அவர்கள் நம்பும் ஈசா என கூறும் பொயயர் மிர்சா குலாம் நிரூபிக்க வரமாட்டார்கள். ஈசா நபி உயிருடன் உள்ளார் என நம்புவது சிர்க் என்று சொன்ன மிர்சா குலாம்,, மூசா நபி வானத்தில் உயிருடன் உள்ளார். அவர் மரணக்கவில்லை. மரணித்தவர்களில் அவர் இல்லை என நம்புவதை அல்லாஹ் நம்மீது கடமையாக்கியுள்ளான் என நூருல் ஹக் 68-69 இல் எழுதியுள்ளார்.  இப்படி பொய்யர்களை அல்லாஹ் இலகுவாக அடையாளம் காட்டி தமக்கு தாமே முரண்பட்டுக்கொள்ள வைப்பான். இனி இரண்டு ஈசாக்கள் இருக்கிறார்களா என பார்ப்போம்: --------- நபிகளார் ஒருபோதும் இரண்டு ஈசாக்கள் என்று சொல்லவே இல்லை!!  வரக்கூடிய ஈசாவும் ஏற்கனவே நபியா...

ஈசா நபி மரணிக்கவில்லை! குர்ஆனை திரிப்போருக்கு பதில் மறுப்பு 4

ஈசா நபி மரணிக்கவில்லை! குர்ஆனை திரிக்க முற்படுவோருக்கு பதில் 4 ----------------------------------------------------------------- காதியானிகளிக்கி வேலையே குர்ஆனை திரிப்பது தான்.. குர்ஆனில் தெளிவாக ஈசா நபியை அல்லாஹ் தன் பக்கம் உயர்த்திகொண்டான் என இருக்கும்போதும் அதை திரித்து சம்பந்தமே இல்லாத வசனங்களுடன் மோதவிட்டு அவரை எப்படியாவது மரணிக்க செய்ய பார்க்கிறார்கள். காரணம்,, அவர் மரணித்தார் என கூறினால் தானே மிர்சா உண்மையாளர் ஆக முடியும்? அதுக்காக தான் இந்த தில்லுமுல்லு இவ்வசனங்களை நாம் பார்ப்போம். 1. தவஃப்பா (5:117) மற்றும் முதவஃப்பீக (3:55) என்பவற்றை பதிவிலேயே பதிந்துள்ளேன். எனவே அதை திரும்ப பதியல. பார்க்க ( https://answeringqadianism.blogspot.com/2020/01/2.html?m=1  ) ----------------------------------------------------------------- 2. (16:20-21) அல்லாஹ்வையன்றி அவர்கள் அழைப்பவர்கள் இறந்தவர்கள் உயிருடன் இல்லாதவர்கள்.- இவ்வசனத்திற்கும் ஈசா நபியிற்கும் சம்பந்தமே இல்லை.. இப்ராஹீம் நபி போன்றவர்களுக்கும் சிலைவைத்து வணங்கினர் மக்கா காஃபிர்கள்.. அவர்களையே இது குறிப்பிடுகிறத...

ஈசா நபி மரணிக்கவில்லை (ஹதீஸ் ஆதாரம்)! காதியானிகளுக்கு மறுப்பு 3

ஈசா நபியின் மரணிக்கவில்லை  (ஹதீஸ்களில் இருந்து) காதியானிகளுக்கு மறுப்பு 3 ------------------------------------------------------------------ முந்திய பகுதியில் ஈசா நபி மரணிக்கவில்லை என்பதற்கு குர்ஆனிலிருந்து ஆதாரங்களை பார்த்ததோடு , காதியானிகள் ஈசா நபி மரணித்துவிட்டார் என்று பிதற்றுவதற்கு ஆதாரமாக எடுத்வைக்கும் வசனங்களின் விளக்கத்தையும் பார்த்தோம். இப்பகுதியில் ஸஹீஹான ஹதீஸ்களில் ஈசா நபியின் வருகை பற்றி உள்ள தகவல்களை பார்ப்போம்: 1. ஈசா நபி தஜ்ஜால் வந்து நாற்பதாவது நாளில் , இரண்டு வானவர்களின் இறக்கைகளில் கையை வைத்தவராக டமஸ்கஸிற்கு கிழக்கு பகுதியிலுள்ள வெள்ளை மினாராவில் இறங்குவார்: 👇👇 5629. நவ்வாஸ் பின் சம்ஆன் (ரலி) அவர்கள் கூறியதாவது: ஒரு நாள் காலையில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தஜ்ஜாலைப் பற்றிக் குறிப்பிட்டார்கள். அவன் ....... பின்னர், அவன் வாட்டசாட்டமான இளைஞர் ஒருவரை அழைத்து, அவரை வாளால் வெட்டி இரு துண்டுகளாக்கி,அம்பெய்யும் தூரத்திற்கு இடைவெளிவிட்டு (அவ்விரண்டையும்) போடுவான். பின்னர் அந்தச் சடலத்தை அழைப்பான். உடனே அந்த இளைஞர் முகம் ஒளிர சிரித்துக்கொண்டே எழ...

ஈசா நபி மரணித்துவிட்டார்களா? காதியானிகொள்கைக்கு நம் மறுப்பு 2

காதியானிகள் யார்? அவர்களது கொள்கை என்ன?? ஈசா நபியும் பொய்யர்களான போலி ஈசாக்களும்! பாகம் 2 ---------------------------------------------------------------------------------------- முஸ்லிம்களான நாம் நபிகளார்(ஸல்) அவர்கள் முதல் அனைத்து சஹாபாக்களும் நேர்வழிபெற்ற இமாம்களும் இன்றுவரை ஈசா நபிவிசயத்தில் ஒன்றுபட்டுள்ளார்கள். அதாவது,  ஈசா இப்னு மர்யம் (அலை) அவர்களை காஃபிர்கள் சிலுவையில் அறைந்து கொல்ல தயாரானபோது, அன்னாரை அல்லாஹ் வானத்திற்கு உயர்த்தி காப்பாற்றினான். அவருக்கு பதிலாக அவரைப்போல ஒப்பாக்கப்பட்ட ஒருவர் சிலுவையில் அறையப்பட்டார்.. மறுமை நெருங்கும்போது அவர் இரண்டு வானவர்களின் இறக்கைகளில் கையை வைத்தவாறு இறங்குவார், தஜ்ஜாலையும் அவனது படையையும் அழிப்பார்... ஜிஸ்யா வரியை நீக்கி மக்களிடமிருந்து இஸ்லாத்தை மட்டுமே ஏற்றுகொள்வார்.. அவரது காலத்தில் செலவம் பெருகும் என்றெல்லாம் நபிகளார் கூறியதில் ஒருமித்த கருத்தில் இருந்து வருகிறோம்!! ஆனாலும் சில கயவர்கள் முஸ்லிம்களின் அறியாமையை பயன்படுத்தி , குர்ஆனை திரித்து , பலவீனமான இட்டுக்கட்டப்பட்ட ஹதீஸ்களை ஆதாரமாக வைத்து இதை பொய்ப்பித்து...

காதியானி கொள்கைகளும் நம் மறுப்பும் 1

காதியானிகள் யார்? அவர்களது நம்பிக்கை என்ன? பாகம் 1 ------------------------------------------------------------------ காதியானிகள் தம்மை முஸ்லிம்கள் என கூறிக்கொள்ளும் இஸ்லாத்திலிருந்து வெளியேறிய குழு ஆகும். இவர்கள் குர்ஆன்&ஹதீஸ்களை திரித்து தம் வழிகேட்டுக்கு ஆதாரம் உருவாக்குபவர்கள் ஆவர். நம் தொழுகையை தொழுது நம் கிப்லாவை பின்பற்றி நாம் அறுப்பதை உண்பதால் மட்டும் ஒருவர் முஸ்லிமாக மாட்டார் அவர் இஸ்லாமிய அடிப்படைகளை நிராகரித்துவிட்டால்.... இவர்களது நம்பிக்கை என்ன? (இறுதி நபித்துவத்தை மறுத்து, மிர்சாகுழாம் என்ற பொய்யரை இறுதிநபியாக நம்புகிறார்கள்) நபிகளாரே இறுதி நபி என்ற உண்மையை மறுக்கிறார்கள் 1.அல்லாஹ் நபிகளாரை " ஃகாதமுன் நபிய்யீன் " என குர்ஆனில் 33:40 இல் கூறுகிறான். இதன் அர்த்தம் "நபிமார்களின் முத்திரை" என்பதாகும். இதே வசனம் "ஃகாதிமுன் நபிய்யீன்" எனவும் ஓதப்பட்டுள்ளது. இதன் அர்த்தம் "நபிமார்களில் இறுதியானவர்" என்பதாகும். "ஃகாதிம்/ஃகாதம்" எதுவாக இருந்தாலும் இவ்வசனம் குறிப்பது நபிமார்களில் இறுதியானவர் என்ப...

இமாம் அல்-மஹ்தியும் போலிகளும்

இமாம் அல்- மஹ்தியும் பொய்யர்களும் -------------------------------------------- இறுதி காலத்தில் அல்மஹ்தி என்ற ஆட்சியாளர் தோன்றுவார் என நபிகளார் (ஸல்) அவர்கள் முன்னறிவித்துள்ளார்கள்.   அவர்கள் ஈசா நபியின் வருகைக்கு முன் ஆட்சிக்கு வந்துவிடுவார் என ஹதீஸ்களில் காண முடிகிறது.  ஆனாலும் முஸ்லிம்களின் அறியாமையை பயன்படுத்தி சில கயவர்கள் தம்மை வாக்களிக்கப்பட்ட மஹ்தி என்றும் ரசூல் என்றும் நபி என்றும் ஈசா என்றும் வாதிட்டு வழிகெடுத்துள்ளனர் இனியும் வழிகெடுப்பார்கள். எனவே "உண்மையில் மஹ்தி யார்? " என ஸஹீஹான ஹதீஸ்களிலிருந்து காண்பதோடு, இதுவரை தம்மை மஹ்தி என வாதிட்டோரின் பட்டியலையும் காண்போம். ------------- அல்-மஹ்தி ------------- மஹ்தி என்றால் நேர்வழிபெற்றவர் என அர்த்தப்படும்.  நபிமார்கள் , நபித்தோழர்கள் என அனைவரும் மஹ்திய்யூன்களில் அடங்குவார்கள். ஆனாலும் நபி(ஸல்) அவர்கள் தன் குடும்பத்திலிருந்து ஒரு ஆட்சியாளர் வருவார் என்றும் அவரை "அல் மஹ்தி" என்றும் குறிப்பிட்டுள்ளார்கள். இதுபற்றி வரும் ஹதீஸ்களை காண்போம்: ஹதீஸ் 1: அபூசயீத் அல்-குத்ரி (ர) அறிவித்தார்கள்: ...