மிர்சா காதியானியும் முகம்மதி பேகமும்!! பொய்யரென நிரூபனமான காதியானி
முகம்மதி பேகமும் மிர்சா காதியானியின் பித்தலாட்டமும் ------------------------------------------------ .. மிர்சா குலாம் மிகம்மதி பூகத்தை மணப்பது பற்றி இவ்வாறு சொன்னார்: முஹம்மதீ பேகத்தை நாம் உமக்கு திருமணம் செய்து வைத்தோம் என்று அல்லாஹ் எனக்கு வஹீ அறிவித்தான். இது ஒரு முன்னறிவிப்பு அல்ல. இதில் ஆறு முன்னறிவிப்புகள் உள்ளன. முதலாவது : அவளைத் திருமணம் செய்யும் வரை நான் உயிருடன் இருப்பேன். இரண்டாவது; அவளைத் திருமணம் செய்யும் வரை அந்தப் பெண்ணின் தந்தை உயிருடன் இருப்பார். மூன்றாவது எனக்குத் திருமணம் செய்து தந்த பின் அவளுடைய தந்தை மூன்று வருடத்துக்குள் இறப்பார். நான்காவது முஹம்மதீ பேகத்தின் கணவர் சுல்தான் முஹம்மத் இரண்டரை வருடத்தில் மரணிப்பார். ஐந்தாவது அப்போது நான் முஹம்மதீ பேகத்தைத் திருமணம் செய்வேன். ஆறாவது அவளை மணப்பேன் . அது வரை அவள் உயிருடன் இருப்பாள் இந்த ஆறு அறிவிப்புக்கள் நிறைவேறா விட்டால் அதுவே நான் பொய்யன் என்பதற்கான ஆதாரம் என்று மிர்ஸா குலாம் சொன்னார். ஆயினே கமாலாத் என்ற நூலில் 325 ஆம் பக்கத்தில் இதை அவர் எழுதினார்.. இது நிறைவேறவில்லை என எல்லோருக்கும் தெரியும்.. ...