மூசாவும் ஈசாவும் உயிருடன் இருந்தால்- காதியானி பித்தலாட்டம்.
மூசாவும் ஈசாவும் உயிருடனிருந்தால் என்னை பின்பற்ற வேண்டும்- காதியானி பித்தலாட்டகாட்டுகிறார்கள் ------------------------------------ மிர்சா குலாம் அஹ்மது காதியானி என்பவர் தன்னை ஈசா நபி என வாதிட்டார். அவரை ஒருகூட்டம் உண்மை என நம்பி நம்முடன் வாதிப்பவர்களாக இருக்கிறார்கள். இவர்கள் எப்போதும் ஈசா நபியை மரணித்தவராக காட்டுவதற்கே முயற்சிப்பார்கள். அப்படி செய்தால் தானே அவர்களின் மிர்சா காதியானியை ஈசா நபி என நிருவ முடியும்? அதற்காக சம்பந்தமே இல்லாத அல்லது ஆதாரமே இல்லாத தகவல்களை பகிர்ந்து தமக்கு ஆதாரம் கிடைத்துவிட்டதாக வாதாடுவார்கள். அந்த வகையில் இவர்கள் காட்டும் ஒரு செய்தியை பார்ப்போம்: ﻟﻮ ﻛﺎﻥ ﻣﻮﺳﻰ ﻭﻋﻴﺴﻰ ﺣﻴﻴﻦ ﻟﻤﺎ ﻭﺳﻌﻬﻤﺎ ﺇﻻ ﺍﺗﺒﺎﻋﻲ- முசாவும் ஈசாவும் இரு உயிருடன் உள்ளவர்களாக இருந்தால், என்னை பின்பற்றுவதை தவிர அவர்களிருவருக்கும் (வேறு எதுவும்) முடியாது./அனுமதியில்லை. (தஃப்சீர் இப்னு கசீர் -குர்ஆன் 3:81க்கான விளக்கத்தில் வரும் செய்தி) இதே செய்தியை ச-அஃரானி, இப்னுல் கையும் உட்பட பலர் தம் நூல்களில் பதிந்துள்ளார்கள். ஆனாலும் ஸஹீஹான ஹதீஸ்களில் மூசா நபியை குறித்து மட்டுமே இவ்வாறு கூறப்பட்டுள்ளது. ஈசா நபியை...